Monday, 17 October 2022
நடந்து முடிந்த தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான ஒன்பதாவது தேர்தலில் தோழர் C K M மீதும். NFTE- BSNL சங்கத்தின் மீதும் உதவாக்கரை சங்கத்தினரும் அதன் பினாமி சங்கத்தினரும் ஆண்டுக்கணக்கில் நடத்திவந்த அபாண்டமான - அருவருக்கத்தக்க பொய்ப் பிரச்சாரத்தை அடியோடு ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள் பெரும்பான்மையான சென்னை தொலைபேசி ஊழியர்கள் . நமது ஊழியர்கள் இந்த தேர்தலில் மொத்தம் பதிவான 1135 வாக்குகளில் NFTE சங்கத்திற்கு மட்டுமே 588 வாக்குகளை வாரிவழங்கி வெற்றிப் பெற செய்தனர் .
தொழிற்சங்க அங்கீகார தேர்தலுக்கு சிறிதும் சம்பந்தமே இல்லாத டெலிகாம் கூட்டுறவு சொசைட்டியின் சிக்கல்களை பூதாகரமாக்கி வாய்க்கு வந்தபடி அண்டப் புளுகு பிரச்சாரத்தை அளவில்லாமல் நடத்தி தோழர் சி கே எம் மீது குரோத உணர்வுடன் மிகவும் மூர்க்கத்தனமான தனிநபர் தாக்குதலை தொடுத்தனர் . ஒரு ‘தறுதலை’ சாதி உணர்வுகளை தூண்டிவிட்டு அதில் குளிர்காய பகல் கனவு கண்டது . நமது ஊழியர்கள் அந்த கிரிமினல் பேர்வழியின் கீழ்த்தரமான செய்கைகளை அடியோடு நிராகரித்தனர் . NFTE சங்கம் அதனை எதிர்த்து போட்டியிட்ட 13 சங்கங்கள் பெற்ற மொத்த வாக்குகளை விட அதிகமான வாக்குகளை
இந்த தேர்தலில் தனியாக பெற்றது சிறப்பான சாதனை .
இத்தகைய மாபெரும் வெற்றியை நமக்கு அளித்த ஊழியர்களுக்கு நெஞ்சுநிறை நன்றிதனை உரித்தாக்குகிறோம் . குறிப்பாக SEWA/ TEPU /ATM / PEWA உள்ளிட்ட நமது கூட்டணி சங்க தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் நன்றிதனை உரித்தாக்குகிறோம் . 2019 ல் நடந்த எட்டாவது அங்கீகார தேர்தலில் NFTE சங்கம் 38. 8 % சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி அடைந்தது . தற்பொழுது 2022 ல் நடந்து முடிந்த ஒன்பதாவது தேர்தலில் 51.18 % சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளது . அதாவது NFTE சங்கம் சுமார் 12 % கூடுதலாக வாக்குகளை பெற்றிருக்கிறது . 293 வாக்குகள் வித்தியாசத்தில் NFTE சங்கம் சரணாகதி சங்கமான BSNLEU சங்கத்தை தோற்கடித்துள்ளது .
தோழர் சி கே எம் மீது அவரின் எதிராளிகள் நடத்திய புளுகுப் பிரச்சாரத்திற்கு நமது ஊழியர்கள் அளித்துள்ள இந்த பதிலடியை பார்த்த பிறகாவது அவர்களின் இழிவான பொய்ப் பிரச்சாரத்தை இந்த கோயபல்ஸ்கள் நிறுத்திக் கொள்வார்களா ?
Thursday, 29 September 2022
Subscribe to:
Posts (Atom)