25/02/21 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் NFTE-BSNL கிளைச் சங்கத்தின் மாநாடு போரூர் தொலைபேசி நிலைய வளாகத்தில் மூத்த தோழர்
N.V. சோமசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சுந்தரசீலன் கொடியேற்றி வைத்து மாநாட்டை துவக்கினார். மாநிலச் செயலாளர் சி.கே.எம், செங்கற்பட்டு மாவட்ட செயலாளர் ஏகாம்பரம், வடசென்னை மாவட்டச் செயலாளர் சிற்றரசு, தென் பகுதி செயலாளர் சத்யா, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கோபால், தென் சென்னை மாவட்டச் செயலாளரும் தமிழ்நாடு NFTCL மாநிலத் தலைவர்
பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தோழர்கள் , K. ஹரிகிருஷ்ணன்,. G. குமரவேல், R. நந்தகுமார் ஆகியோர் முறையே தலைவர், செயலாளர், பொருளாளர் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.மொத்தமுள்ள ஊழியர்கள் 15 பேரில் 13 பேர் ( 87 %) NFTE-BSNL சங்க உறுப்பினர்கள் என்பது பாராட்டுக்கு உரியது.எஞ்சிய இருவரையும் கூட தாமதமின்றி நமது சங்கத்தில் இணைத்து 100/100 NFTE-BSNL கிளையாக போரூர் கிளையை மாற்றிட புதிய நிர்வாகிகளை தோழர் சி.கே.எம். கேட்டுக் கொண்டார். புதிய கிளைச் செயலாளர் குமரவேல் நன்றி கூறினார்.